ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட பாண் விலை மீண்டும் குறைக்கப்படும்…!!
Read Time:1 Minute, 3 Second
ஒரு ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்ட பாண் உட்பட பேக்கரி தயாரிப்பு உணவுப் பொருட்களின் விலையை மீண்டும் பழைய நிலைக்கு குறைப்பதற்கு தயார் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
வற் மற்றும் தேச நிர்மாண வரி அறவீடுகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததையடுத்து மேற்படி விலை குறைப்பு குறித்து ஆராயப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை நடைபெறவுள்ள அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Average Rating