பிரான்சில் புதிய மருந்தை சோதித்ததில் ஒருவர் சாவு: 5 பேர் கவலைக்கிடம்…!!
பிரான்சில் மருத்துவ பரிசோதனையில் பெரிய அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. பரிசோதனையில் ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஐந்து பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில் “புதிதாக கண்டுபிடித்த மருந்தை சோதிப்பதற்காக ஆறு பேர் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த சோதனை வடமேற்கு பிரான்சில் உள்ள ரென்னெஸ் ஐரோப்பிய ஆய்வகத்தில் நடைபெற்றது. அப்போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதார். ஐந்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சோதனை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாரிஸ் அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை வலியை கட்டுப்படுத்துவதற்கான கஞ்சா சார்ந்த பெயின்கில்லர் சோதனை என்று கூறப்படுகிறது. புதிய மருந்து கண்டுபிடிப்பு பரிசோதனையில் ஒருவர் உயிரிழந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating