வல்லப்பட்டைகளை கடத்த முயன்றவர் கைது…!!
Read Time:59 Second
வல்வப்பட்டைகளை நாட்டில் இருந்து கடத்திச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தனது பயணப் பொதியில் 23 கிலோ 400 கிராம் வல்லைப்பட்டை மறைத்து வைத்துள்ளார்.
அவற்றின் பெறுமதி 9,360,000 ரூபா என்றி சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 6.45 மணியளவில் அபுதாபி நோக்கி புறப்பட இருந்த விமானத்தில் அவர் இதனை கடத்திச் செல்வதற்கு இருந்ததாக லெஸ்லி காமினி கூறினார்.
Average Rating