தெமட்டகொடை விபத்தில் தாயும் மகளும் பலி; 15 வயது சிறுவன் கைது…!!
Read Time:1 Minute, 12 Second
தெமட்டகொடை, புகையிரத விளையாட்டரங்கிற்கு அருகில் பேஸ்லைன் வீதியில் மஞ்சள் கடவையினூடாக பாதையை கடக்க முற்பட்ட தயொருவரையும் மகளையும் மோதிவிட்டு தப்பிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 10 வயது மகளும் 47 வயதுடைய தாயொருவரும் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் கார் ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Average Rating