சிரியாவில் பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்…!!
சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை இன்று கடத்திச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் நேற்று பீரங்கி வாகனங்களுடன் வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், குண்டுகளை வீசியும், இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும், வாள்களால் தலைகளை வெட்டித் துண்டித்தும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், சிரியா ராணுவப்படை மற்றும் அதிபரின் ஆதரவாளர் படைகளை சேர்ந்த சுமார் 300 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்ததாகவும் முன்னர் செய்தி வெளியானது.
இந்நிலையில், பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்ளை பிணைகைதிகளாக பிடித்து வைத்து கொண்டு சிலரை மனித கேடயமாகவும், இளம்பெண்களை செக்ஸ் அடிமைகளாகவும் பயன்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating