ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 11 பேர் பலி…!!
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
தலிபான்களால் சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட உள்ளூர் தலைவரின் மகன் சமீபத்தில் விடுவிக்கப்பட்டான். அவனைக்காண அந்த தலைவர் வீட்டின்முன் இன்று ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த கூட்டத்தில் நின்றிருந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டினை வெடிக்கச் செய்ததில் தலிபான்களின் பிடியில் இருந்து விடுதலையாகி வந்தவர் உள்பட 11 பேர் பலியாகினர்.
பத்துக்கும் அதிகமானவர்கள் உடல் சிதைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்தவாரம் பாகிஸ்தான் தூதரகத்தை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அதேபகுதியில் இன்றைய தற்கொலைப்படை தாக்குதலும் நிகழ்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
Average Rating