தர்மபுரி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய என்ஜினீயரிங் மாணவர் காதல் விவகாரமா?: போலீஸ் விசாரணை…!!

Read Time:1 Minute, 46 Second

f96962bc-d82e-4da3-8189-41a923e2dfe0_S_secvpfதர்மபுரி மாவட்டம் மாட்டலாம்பட்டி பகுதியில் உள்ள முருகன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் அருள் (வயது 21).

இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இந்த நிலையில் ஊரின் அருகே உள்ள காந்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் அருள் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி மாணவனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் காந்தி என்பவருடைய தோட்டத்தில் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் மக்கள் கூடினர்.

மேலும் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் அருள் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், மாணவன் அருள் காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 11 பேர் பலி…!!
Next post அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று ஆரம்பம்…!!