கள்ளக்காதலின் விளைவு: கணவனை குண்டு வீசிக் கொலை செய்யும் தூரத்துக்கு சென்றது…!!
நிலத்தை அபகரிப்பதற்காக கள்ளக் காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்ய முயன்ற பெண்ணை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் , கள்ளக் காதலன னுடன் இணைந்து கைக்குண்டு வீசியே கொலைசெய்ய முயற்சித்துள்ளார்.
குறித்த கள்ளக்காதலன் தாக்குதல் நடத்தப்பட்ட அன்று இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு ஸ்ரீ விக்கிரமராஜசிங்க மாவத்தையைச் சேர்ந்த 42 வயது பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைக்குண்டு வீச்சுத் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சந்தேக நபரின் கணவராவார்.
சந்தேக நபரான பெண்ணும் அவரது கணவரும் அவர்களது இரண்டு பிள்ளைகளுடன் இத்தாலியில் தொழிலுக்காக சென்று வசித்து வந்துள்ளனர்.
அங்கு வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த நபருடன் அவர்களுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரான பெண்ணுக்கும் குறித்த நபருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அந்தக் குடும்பத்தினர் இலங்கை திரும்பிய பிறகும் இந்தத் தொடர்பு தொடர்ந்துள்ளது. இதன்பின்னரே கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
Average Rating