விமானத்தில் பயணம் செய்த வான் கோழி…!!
விமானமொன்றில் பயணம் செய்த பெண்ணொருவர் தன்னுடன் வான் கோழியொன்றையும் கொண்டு சென்று சக பயணிகளை வியப்பிலாழ்த்தினார்.
வொஷிங்டன் மாநிலத்திலுள்ள சியாட்டில் நகரிலிருந்து உட்டாஹ் மாநிலத்தின் சோல்ட் லேக் சிட்டி நகருக்கு சென்று கொண்டிருந்த டெல்டா எயார்லைன்ஸ் விமானத்தில் மேற்படி வான் கோழி பயணம் செய்தது.
ஜொடீ ஸ்மெல்லி எனும் பெண் இந்த வான் கோழியை வளர்த்து வருகிறார். உளவியல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சில செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு மருத்துவர்கள் சிபாரிசு செய்வதுண்டு. உணர்வு பூர்வமான துணையான பிராணிகள் என இவை அழைக்கப்படுகின்றன.
ஜொடீ ஸ்மெலி, மேற்படி வான் கோழியை தனது உணர்வுபூர்வ துணையான பிராணியாக வளர்த்து வருகிறார்.
அவர் கடந்த வாரம் தனது வீட்டிலிருந்து உறவினர் வீடொன்றுக்கு சென்றபோது விமானத்தில் மேற்படி வான் கோழியையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
இவ்வான் கோழியை மிக சிறிய பருவத்திலிருந்து தான் வளர்த்து வருவதாகவும் அதற்கு ஈஸ்டர் என பெயரிட்டுள்ளதாகவும் ஜொடீ கூறுகிறார்.
இந்த விமானப் பயணத்தின்போது இவ்வான் கோழிக்கு விசேட டயப்பர் ஒன்றை அவர் அணிவித்திருந்தர்.
சுமார் ஒன்றரை மணித்தியாலம் நீடித்த இந்த பயணத்தின்போது இவ்வான் கோழி அமைதியாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வான் கோழியை விமான நிலையங்களில் தள்ளு வண்டியில் இல்லாமல், சக்கர நாற்காலியில் வைத்தே ஜொடீ ஸ்மெலி கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating