தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு தீயணைப்புத் துறையினரிடம் உதவி கோரிய இத்தாலிய பெண்…!!

Read Time:2 Minute, 24 Second

uiuuiஇத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு உதவுமாறு தீயணைப்புத் துறையினரை கோரியதன் மூலம் அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.

இத்தாலியின் பதுவா எனும் நகரைச் சேர்ந்த நடுத்தர வயதான பெண்ணொருவரே அந்நாட்டு தீயணைப்புத் துறையினரிடம் இக்கோரிக்கையை விடுத்தார்.

தீயணைப்புத்துறை நிலையத்துக்குச் சென்ற மேற்படி பெண், தனது கற்புக் கவசப் பட்டியின் (chastity belt) சாவிகளை தான் தொலைத்துவிட்டதாகவும் அதனால் மேற்படி கவசத்தை தன்னால் திறக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்தாராம்.

அப்பெண் கூறுவதை தீயணைப்புத்துறையினரால் ஆரம்பத்தில் சரியாக புரிந்துகொள்ள முடிவில்லை.

அப்பெண் தனது வீட்டின் சாவியை தொலைத்துவிட்டார் என்றே அவர்கள் முதலில் எண்ணினர். அதனால் அப்பெண்ணின் வீடு எங்கே உள்ளது என அவர்கள் பல தடவைகள் கேட்டனர்.

அப்போதே மேற்படி தனது ஜம்பர் ஆடையை நீக்கி, தான் அணிந்திருந்த கற்புக் கவசத்தை வெளிப்படுத்தியதுடன், அதன் சாவியையே தொலைத்துவிட்டதாக கூறினார்.

அதன்பின் தீயணைப்புத் துறையினர் மேற்படி கவசத்தை தகர்த்து அப்பெண்ணை விடுவித்தனர்.

பழங்காலத்தில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் கணவர்கள் தமது மனைவிக்கு இத்தகைய கவசத்தை பூட்டிவிட்டுச் செல்லும் வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்பெண்ணுக்கு யாரேனும் இக்கவசத்தை பலவந்தமாக அணிவித்தனரா என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தினர்.

எனினும் அப்பெண், பாலியல் உறவுகளை தவிர்ப்பதற்காக தனக்குத் தானே இக்கவசத்தை அணிந்துகொண்டதாக தெரியவந்ததாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 7 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கர்ப்பிணிக்கு திருமணமாகவில்லை…!!
Next post ஆப்கானிஸ்தானில் செல்போன் நிறுவனங்களுக்கு புதிய வரிவிதிக்கும் தலிபான்கள்…!!