மனநிலை பாதித்த பெண் நடுரோட்டில் தீக்குளித்தார்

Read Time:2 Minute, 35 Second

மனநிலை பாதிக்கப்பட்ட பெண், ஆலந்தூரில் நடுரோட்டில் தீக்குளித்து இறந்தார். ஆலந்தூர் அலிகான் தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம். பரங்கிமலையில் உள்ள ராணுவப் பயிற்சி அதிகாரிகள் அலுவலகத்தில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அவரது மனைவி மாகலட்சுமி (36). அவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. மிதுன்ராஜ், வினித் என்ற 2 மகன்கள் உள்ளனர். மகாலட்சுமிக்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டது. அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இரவில் மகாலட்சுமி பயத்தில் அலறுவார். யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வார். இந்நிலையில், திருப்போரூரில் நடக்கும் ராணுவப் பயிற்சி முகாமுக்கு, அதிகாரிகளுடன் பத்தவச்சலம் நேற்று முன்தினம் சென்றார். மகாலட்சுமியுடன் அவரது தாய் பத்மாவதி இருந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு திடீரென எழுந்த மகாலட்சுமி, சமையல் அறைக்கு சென்று மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு ஓடிவந்தார். உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டதும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அங்கும், இங்கும் சாலையில் ஓடினார். அவரது மரண ஓலத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து காப்பாற்ற முயற்சித்தனர். அதற்குள் உடல் கருகி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். பரங்கிமலை போலீசார் விரைந்து வந்து, மகாலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தங்கர்பச்சான் வீட்டு முன் அழுத பெரியவர்!
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…