ஏமனில் போலீஸ் கட்டிடம் மீது சவுதி கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்: 26 பேர் பலி…!!
Read Time:54 Second
ஏமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை விமானங்கள் போலீஸ் கட்டிடம் மீது நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
சனாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த காவல் துறையினரின் கட்டடத்தின் மீது சவூதி கூட்டுப் படையின் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் கட்டடம் தகர்ந்தது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
கட்டிட இடிபாடுகளில் மேலும் 30 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்.
Average Rating