கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய நான்கு பேர் பலி…!!

Read Time:1 Minute, 34 Second

ytuyuyசென்னையின் புறநகர் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி ஒன்றின் கழிவுநீர் தொட்டியின் உள்ளே இறங்கிய நான்கு பேர் இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் துரைப்பாக்கம் அருகில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் சுத்தீகரிப்பு தொழிலில் ஈடுபட்ட ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவரும், தனியார் உணவு விடுதியின் ஊழியர் ஒருவரும் என மொத்தமாக நான்கு பேர் இந்த சம்பவத்தில் இறந்துள்ளதாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த இவர்கள் விஷவாயு தாக்கி முதலில் பலியாகியுள்ளனர்.

முதலில் ஒருவர் தொட்டியினுள் சிக்கி இருந்த நிலையில், அவரை காப்பாற்ற உள்ளிறங்கிய சரவணன், வேல்முருகன் மற்றும் ராஜேஷ் ஆகியோரும் பலியானதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோலில் ஏற்பட்ட சுருக்கத்தை நீக்குவதற்கு பிளாஸ்திக் சத்திரசிகிச்சை செய்த பிரேஸில் அழகுராணி 28 வயதில் மாரடைப்பால் மரணம்…!!
Next post 7 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கர்ப்பிணிக்கு திருமணமாகவில்லை…!!