அமெரிக்காவில் காதலனை குத்தி கொலை செய்த இளம்பெண் கைது..!!

Read Time:1 Minute, 36 Second

74199e2c-5cb5-450d-86bb-5552b81318cb_S_secvpfஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில் வசித்து வந்தவர், டோரியன் பவல் (வயது 21). இவர் நகாசியா ஜேம்ஸ் (18) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியபோது, டோரியன் பவலை காதலி நகாசியா கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இது பற்றி அவர் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில், “ஒரு கத்தியால் அவரை சரமாரியாக குத்தினேன். நான் அவரை காயப்படுத்துவேன் என நினைக்கவே இல்லை. ஆனால் அவர் இறந்து விட்டார். நான் தலைமறைவாகி விட்டேன்” என ஒப்புதல் வாக்குமூலம் போல கூறி இருந்தார்.

பின்னர் அவர், “நான் அவரை குத்துவேன் என்று நினைக்கவில்லை என்பதை கடவுள் அறிவார். கடவுளே, நான் நடந்த சம்பவத்துக்காக வருந்துகிறேன். என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னை மன்னித்து விடு, டோரியன் பவல். உன் ஆன்மா சாந்தி அடைவதாக” எனவும் அதில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதை அடுத்து அவர் ஹேமட் என்ற நகரில் தங்கி இருந்ததை அறிந்து போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெஷாவர் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!
Next post துபாயில் மர்மமாக இறந்து கிடக்கும் இவர் யார்?: அடையாளம் தெரிந்தால் உதவலாம்…!!