உங்களுக்கு பைத்தியமா-முறைப்பாடு செய்ய சென்ற பெண்ணிடம் பொலிஸ் கேள்வி…!!
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற பெண்ணை பொலிஸ் உத்தியோகத்தர் பைத்தியம் என தெரிவித்ததால் முறைப்பாடு செய்யச்சென்றவர் அங்கு சண்டை பிடித்த சம்பவம் நேற்று நடைபெற்றது.
நீர்வேலி வடக்கு பகுதியை சேர்ந்த பிரஸ்தாக பெண் ஒரு கிராம சேவையாளர் ஆவார்.இவர் அருகில் உள்ள குடும்ப பெண்ணை வீதியால் வரும் போது கேலி செய்துள்ளார்.
இதன் போது அப்பெண் கிராம சேவக பெண்ணை புரட்டி புரட்டி அடித்துள்ளார்.
அடித்த கையுடன் யாழ் பொலிஸ் நிலையத்தில் வந்து தனக்கு தெரிந்த பொலிஸ் நண்பர் உதவியுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் கிராம சேவக பெண் தனக்கு பெண் ஒருவர்(பொலிஸூடன் கதைத்து கொண்டிருந்த) அவரை பார்த்து அடித்ததாகவும் முறைப்பாடு செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
ஆனால் முறைப்பாடு எழுத வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கிராம சேவக பெண்ணை பார்த்து உங்களுக்கு பைத்தியம் என்று சொல்கின்றனரே நீங்கள் பைத்தியமா என வினவியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பெண் அடிபட்டு வந்து இருக்கின்ற நான் பைத்தியமா என குறித்த பொலிஸாரை தாக்க முயன்றதோடு அவ்விடத்தை ஒரு பதற்ற நிலைக்கு கொண்டு வந்தார்.
Average Rating