வவுனியாவில் குடும்பஸ்தரை கடத்தித் தாக்கிய, தமிழரசுக் கட்சி முக்கிய உறுப்பினர் கருணாநிதி..!!

Read Time:2 Minute, 13 Second

timthumbவவுனியாவில் புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவரை ஆட்டோ ஒன்றில் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் கருணாநிதியும் அவரது மகனும் ஆட்டோ ஒன்றில் கடத்தி தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த புதன்கிழமை விவசாயக் காணி தொடர்பாக விவசாய திணைக்கள பணிப்பாளரால் பலர் கூட்டம் ஒன்றிற்கு அழைக்கப்பட்டனர்.

கூட்டம் முடிந்தவுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட புளொட் உறுப்பினர் மீது வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் நெருக்கமான நண்பரும், தமிழரசுக் கட்சி உறுப்பினருமான கருணாநிதியும் அவரது மகனும் இணைந்து கமநலசேவைகள் திணைக்கள வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்திவிட்டு ஆட்டோ ஒன்றில் கடத்த முயன்றுள்ளனர்.

இதன்போது, தாக்குதலுக்குள்ளான புளொட் உறுப்பினரான ரவி சுதாகரித்துக் கொண்டதால் கடத்தில் முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். பலர் முன்னிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதும் இது தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

*உண்மையில் அங்கு நடந்தது என்ன…?

*புளொட் உறுப்பினரை கடத்தும் முயற்சி முன்னரே திட்டமிடப்பட்டதா…?

*கமநல சேவைகள் திணைக்கள வளாகத்திற்குள் சம்பவம் நடைபெற்ற போதும் அதன் அதிகாரி மௌனம் காப்பது ஏன்…?

*பொலிஸ் விசாரணையில் இருந்து தப்ப கருணாநிதி அமைச்சர் சத்தியலிங்கத்தைப் பயன்படுத்தினாரா..?

*யார் இந்த கருணாநிதி…?

***விரைவில் எதிர்பாருங்கள்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழிவறைக்குள் மனைவி தொலைபேசி உரையாடல் : தலைமுடியை அறுத்த கணவன்…!!
Next post முதல்வரை தம் தாளத்துக்கு ஆடவைக்கவா “தாரை தப்பட்டை”? -மாதவன் சஞ்சயன்…!!