இலங்கையில் விடுதலைப்புலிகள் 24 பேர் பலி
Read Time:57 Second
இலங்கையின் வடமேற்கு மாகாணமான தலைமன்னாரில் பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த மோதல்களில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டனர். இந்த தகவலை இலங்கை ராணுவம் தெரிவித்தது. இது தவிர வவுனியா பகுதியில் நடந்த மற்றொரு சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். இதை, இலங்கை தேசிய பாதுகாப்பு துறையின் தகவல் தொடர்பு மையத்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த மோதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.