புதுக்கோட்டை சிறையில் கைதி திடீர் மர்மச்சாவு..!!
புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதியை சேர்ந்தவர் ஆண்டி (வயது 48). இவர் அங்குள்ள ஆதி திராவிடர் விடுதி ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் விடுதியில் இருந்து அரிசி கடத்தியதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் ஆண்டியை கைது செய்து புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் நேற்று அடைத்தனர்.
இந்த நிலையில் இன்று சிறையில் மர்மமான முறையில் ஆண்டி இறந்து கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீசார் ஆண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது உடல் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
சிறைக்குள் ஆண்டி திடீரென்று மர்மமாக இறந்தது பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஆண்டி மர்மச்சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் சிறை வளாகத்திற்குள்ளும் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
Average Rating