அமெரிக்காவில் 2015-ம் ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் இந்தியர்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பு..!!
வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 9 லட்சம் மக்கள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். அதில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளனர் என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதில், “ஆகாயம் மார்க்கமாக, கடல் வழி மார்க்கமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 450 கோடி பேர் அமெரிக்காவிற்கு வருகை புரிந்துள்ளதாகவும் அதில் சுமார் 5 லட்சத்து 27 ஆயிரத்து 127 பேர் காலம் கடந்து தங்கியுள்ளதாகவும்” கூறப்பட்டுள்ளது.
மேலும், ”தீவிரவாதத்துடன் தொடர்புள்ள நாடுகளான பாகிஸ்தான்(1,435), ஈராக்(681), ஈரான்(564), சிரியா(440) உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கணிசமானவர்கள் அமெரிக்காவில் தங்கியுள்ளனர். கடந்த 2014 அக்டோபர் முதல் செப்டம்பர் 2015 வரை 98.83 சதவீதம் பேர் சரியான நேரத்தில் வெளியேறியுள்ளனர்.” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating