கொழும்பு மாவட்ட மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு…!!
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக கொழும்பு மாவட்ட மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
கடந்த 18ம் திகதி முதல் கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவில் புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்காக பொது மக்கள் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
அதன்போது பெருமளவான மக்கள் தமது யோசனைகளை முன்வைத்திருந்ததாக, மக்கள் கருத்துக்களை பெரும் அரசியலமைப்பு திருத்த குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
இன்று மாலை 04.30 மணிவரை பொது மக்கள் அங்கு கருத்துக்களை முன்வைக்க முடியும்.
எதிர்வரும் 01ம் திகதி முதல் ஏனைய மாவட்டங்களிலும் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
இது தவிர சட்டத்தரணிகள் சங்கம், புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்காக சட்டத்தரணிகளிடம் கருத்துக்களைப் பெற்று அரசியலமைப்பு திருத்த குழுவிற்கு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating