இலங்கையில் இருந்து மண்டபத்திற்கு படகில் வந்த 2 அகதிகள் மாயம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
இலங்கையில் இருந்து படகு மூலம் மண்ட பத்திற்கு வந்த 2 அகதிகள் மாயமானார்கள். அவர் களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அகதிகள் வருகை இலங்கையில் ராணுவத்துக் கும், விடுதலைபுலிகளுக்கும் நடந்து வரும் போர் காரணமாக தினமும் ஏராளமான அகதிகள் மண்டபத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் 2 பட குகளில் 3 ஆண்கள், 2 பெண் கள் என மொத்தம் 5 பேர் வந் துள்ளனர். இவர் களில் 3 ஆண் கள் மட்டுமே மண்டபம் காவல் நிலையம் வந்துள்ளனர். படகில் வந்த 2 பெண்களும் பஸ் நிறுத்தம் வரை மட்டுமே வந்துள்ளனர். பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை. இதுபற்றி அகதி யாக வந்த யோகேந்திரன் கூறிய தாவது:- மாயம் பேச்சாலையில் இருந்து பட கிற்கு 10 ஆயிரம் கொடுத்து வந்தேன். என்னுடன் என் அப்பா தங்கராஜம் வந்திருந்தார். நாங் கள் வந்த பிளாஸ்டிக் படகில் எங்களுடன் மேலும் 2 பெண்க ளும் வந்திருந்தனர். கடற்கரை யில் இறங்கி முகாம் பஸ் நிறுத் தம் வரை எங்களுடன் வந்த அவர்கள், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருப்பதாக கூறி னார்கள். பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அதில் ஒரு பெண்ணின் பெயர் ஷோபா. எனது மனைவி குழந்தைகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பே தமிழகம் வந்து விட்டனர். அவர் கள் எந்த முகாமில் தங்கியுள் ளனர் என்று தெரியாது. அவர் களை தேடி தான் நான் இங்கு வந்துள்ளேன் இவ்வாறு அவர் கூறினார். இந் நிலையில் மாயமான 2 பேரை யும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.