கொழும்பு வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் வெலிக்கடை சிறைக்கைதிகள்..!!
Read Time:1 Minute, 1 Second
கொழும்பு நகரிலுள்ள சில வர்த்தகர்களிடம் வெலிக்கடை சிறையிலுள்ள கைதிகள் கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தொலைபோசி மூலம் கப்பம் கோரியுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், இதனை தடுப்பற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
Average Rating