கல்முனை நகரில் இளைஞர் சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 8 Second

4959822.gifகல்முனை நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றது. கல்முனை பொலிஸ் நிலையச் சந்தியில் மணிக்கூட்டுக் கடையொன்றின் முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் மீதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் யாசின் பாவா ஆசாத் காமில் (வயது- 18) என்பவராவார். துப்பாக்கிச் சூடுபட்ட இளைஞர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டபோதும் வழியில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குஜராத்: போலி என்கவுண்டரில் 22 பேர் கொலை!!
Next post 11.47 நிமிடத்தில் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்த மாணவி