பாகிஸ்தானில் அதிரடிப்படை போலீசார் 2 பேர் சுட்டுக்கொலை…!!
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில், சமீப காலமாக தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அந்த நகரின் புறநகரில் அதிரடிப்படை போலீசார் 2 பேரை அடையாளம் தெரியாத, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நேற்று சுட்டுக்கொன்று விட்டனர்.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு இம்தியாஸ் கூறும்போது, “ஷாஜப், இசனுல்லா என்ற 2 அதிரடிப்படை போலீசார், தங்களுடைய அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த, அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டனர்” என்றார்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானில் புத்தாண்டு பிறந்த பின்னர், இதுவரை 60-க்கும் மேற்பட்டவர்கள் தீவிரவாத தாக்குதல்களில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating