நெடுமங்காடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது…!!

Read Time:3 Minute, 1 Second

be1a2458-e241-45af-9d0c-a51e03ade251_S_secvpfகேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 27). தொழிலாளி. இவரது நண்பர் ஒருவரும் அதே பகுதியில் குடியிருந்து வந்தார். நண்பரின் மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியுடன் விஷ்ணு நெருங்கி பழகினார். மேலும் அந்த மாணவியை பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்றார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 25–ந் தேதி காலையில் வீட்டை விட்டு சென்ற மாணவியை அதன்பின்பு காணவில்லை. இதனால் பதறிபோன பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

மாணவி மாயமான அதே நாளில் விஷ்ணுவும் மாயமாகி இருந்தார். இதனால் விஷ்ணுதான் மாணவியை கடத்தி சென்றிருக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கருதினர். இது பற்றி அவர்கள் நெடுமங்காடு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். சில நாட்களுக்கு பிறகு மாணவி மட்டும் வீட்டுக்கு வந்தார். அவர் கூறும்போது, விஷ்ணு தன்னை கடத்தி சென்று கற்பழித்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து போலீசார் விஷ்ணு மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். நேற்று முன்தினம் விஷ்ணு நெய்யாற்றின்கரை ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவளம் பகுதியில் ஓட்டலில் புகுந்து வெளிநாட்டு பெண் ஒருவரை கற்பழிக்க முயன்றதாக நிஷார் என்ற வாலிபரை கோவளம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இது பற்றிய தகவல் நேற்று பத்திரிகைகளில் வெளியானது.

அதனை படித்த இன்னொரு வெளிநாட்டு பெண்ணும் நேற்று கோவளம் போலீஸ் நிலையம் சென்று நிஷார் மீது புகார் கூறினார்.

அதில் நிஷார் தனது அறைக்குள் அத்துமீறி நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி கற்பழிக்க முயன்றதாக கூறியிருந்தார்.

அதன்பேரிலும் போலீசார் இன்னொரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!
Next post யாழ்ப்பாணத்தில் முதல் நில அதிர்வு!: பீதியில் மக்கள்…!!