2ம் வகுப்பு மாணவனிடம் ஹோமோ செக்ஸ்: வாலிபர் கைது

Read Time:1 Minute, 33 Second

pol00029.gifகுளச்சல் அருகே 2ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஹோமோ செக்ஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். குளச்சல் அருகேயுள்ள கல்லுக்கூட்டம் காரவிளையை சேர்ந்த ரவி-ஜானகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் மகன் பிரேம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ராஜேஷ் சிறுவனுடன் பேசி வந்துள்ளார். இந் நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் ராஜேஷ். இதுகுறித்து தனது தாயிடம் சிறுவன் கூறியுள்ளான். இதையடுத்து ராஜேசிடம் சென்று ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்று ஜானகி கேட்டுள்ளார். அப்போது அவரை ராஜேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். இைதயடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post துணை நடிகை-பெண் என்ஜினியர் கட்டிப் புரண்டு சண்டை
Next post சேரன் இயக்கத்தில் விஜய்: வெளிவராத தகவல்கள்