அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 9 பேர் பலி…!!
அமெரிக்காவில் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெரும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இதன்காரணமாக வாஷிங்டனில் அனைத்து வகையான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட கரோலினாவில் 1 லட்சம் வீடுகள் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருளில் தவிக்கின்றன.
20 மாகாணங்களில் 8½ கோடி மக்கள் பனிப்புயலின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். நேற்று மதியம் வரையில் பனிப்புயலால் ஏற்பட்ட விபத்துகளில் வடகரோலினா, வெர்ஜினியா, கென்டக்கி, டென்னிசி மாகாணங்களில் 9 பேர் பலியாகினர். வெர்ஜினியாவில் மட்டும் 989 கார் விபத்துக்கள் நடந்துள்ளன.
கென்டக்கி மாகாணத்தில் நேற்று 18 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. வாஷிங்டனில் 7 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.
இன்று வாஷிங்டனில் பனிப்புயல் கடந்து செல்கிறபோது 30 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். 1922-ல் அதிகபட்சமாக 28 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.
பனிப்புயலால் அமெரிக்க மக்களின் வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.
Average Rating