சய்ப்ரஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி…!!
Read Time:1 Minute, 15 Second
சய்ப்ரஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, 690,000 ரூபாவை மேசடி செய்ததாக கூறப்படும் ஒருவர் தொடர்பிலான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நாத்தன்டிய – குளியாபிடிய வீதி, பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சய்ப்ரஸ் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், எனினும் வேலை பெற்றுத் தராததோடு, பணத்தையும் மீள வழங்கவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating