பாக்.கில் தற்கொலை தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் காயம்

Read Time:1 Minute, 11 Second

பாகிஸ்தானின் கம்ரா நகரில் இன்று நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 5 பள்ளிக் குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். கம்ரா நகரில் தீவிரவாதிகள் பள்ளிப் பேருந்தில் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர். அந்தப் பேருந்து ராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளியைச் சேர்ந்ததாகும். கம்ரா நகரில் விமானப்படைத் தளமும், விமானப்படை அலுவலக வளாகமும் உள்ளன. ராணுவப் பள்ளிப் பேருந்து வந்தபோது, தற்கொலைப் படைத் தீவிரவாதி வந்த வாகனம், பேருந்து மீது மோதியது. இதையடுத்து குண்டு வெடித்ததில் பள்ளிப் பேருந்தில் இருந்த 5 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அந்தப் பேருந்தில் 35 மாணவ, மாணவியர் இருந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் வாஹித் அர்ஷத் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சேரன் இயக்கத்தில் விஜய்: வெளிவராத தகவல்கள்
Next post ஒருதலைக் காதல்: தொழிலதிபரின் மனைவியை கத்தியால் குத்திய என்ஜீனியர் கைது