மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்டம்: ஐ.எஸ்.தீவிரவாதிகள் 7 பேர் கைது..!!
ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர சர்வதேச நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். எனவே, அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், மலேசியாவில் கடந்த 15–ந் தேதி சந்தேகப்படும் நிலையில் சுற்றித் திரிந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவன் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி என தெரிய வந்தது. தலைநகர் கோலாலம்பூரில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அவனிடம் இருந்து துப்பாக்கி தோட்டா குவியல்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பலர் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் மலேசியாவில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து மலேசியா முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில், 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களும் மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.
இத்தகவலை போலீஸ் அதிகாரி அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
Average Rating