மாணவின் உயிரை பறித்த டிபர் வாகனத்தின் சாரதி சிறையில்…!!
Read Time:1 Minute, 3 Second
அம்பாந்தோட்டை –சூரியவெவ – மயுரபுர பகுதியில் மஞ்சள் கோட்டு கடவையில் பாதையை கடக்க முற்பட்ட 10 வயது மாணவியொருவர் டிபர் வாகனமொன்றில் மோதி உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிபர் வாகனத்தின் சாரதி எதிர்வரும் மே மாதம் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறநெறி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த கவிந்து மிஹிரங்க என்ற பத்து வயது மாணவி ஒருவர் நேற்று மதியம் டிபர் வாகனத்தில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது
Average Rating