ஏமனில் சவுதிப் படைகள் வான்வழி தாக்குதல்: நீதிபதி – குடும்பத்தார் 8 பேர் பலி…!!

Read Time:1 Minute, 33 Second

uyiuiஏமன் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக ஹவுத்திப் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சவுதி விமானப்படையின் துணையுடன் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்களின் பதுங்குமிடங்களை குறிவைத்து சவுதி விமானப்படைகள் நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் அப்பகுதியில் இருந்த இரண்டுமாடி வீடு தரைமட்டமானது. அந்த வீட்டில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் தேசிய கோர்ட் நீதிபதியான யஹ்யா ருபைட் வசித்துவந்தார்.

இந்த தாக்குதலில் யஹ்யா ருபைட் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டுபேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், அவரது ஒருமகன் மட்டும் உயிர்தப்பி பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ருட்டன்ஹொவ்மன் சக்ரவர்த்தியின் தாடிக்கு சேதம்..!!
Next post பறவை மோதியதால் பயணிகள் விமானத்தில் பாரிய துளை…!!