டெக்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி…!!
Read Time:1 Minute, 0 Second
நல்லதண்ணீ – ஹெமில்டன் பிரதேசத்தில் டெக்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சாரதியினால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையினாலயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
பலத்த காயங்களுக்குள்ளான 66 வயதினையுடைய டெக்டர் சாரதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
விபத்து தொடர்பாக நல்லதண்ணீ காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating