கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்: ஜப்பான் கப்பலை கடத்தினர்
கடல் கொள்ளையர்கள் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பலை கடத்தி சென்றனர். இதில் 23 மாலுமிகள் உள்பட ஏராளமான தொழிலாளர்களும் இருந்தனர். இவர்களை கடல் கொள்ளையர்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். கோல்டன் ரீ என்ற இந்த கப்பல் பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பலில் ஏராளமான ரசாயன பொருள்கள் இருந்தன. பணயக் கைதிகளை விடுவிக்க 4 கோடி ரூபாய் தரவேண்டும் இல்லையென்றால் அவர்களை கொன்று விடுவதாக கடல் கொள்ளையர்கள் மிரட்டி வருகின்றனர்.அந்த பணய கைதிகளை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.