விமான தாக்குதலில் தெக்ரிக்-இ-தலிபான் தலைவர் மரணம்…!!
ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் தெக்ரிக்-இ-தலிபான் தலைவர் பஸ்லுல்லாஹ் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகங்களும், வலைதளங்களும் பஸ்லுல்லாஹ் மரணம் குறித்து நேற்று இரவு(திங்கட்கிழமை) செய்திகள் வெளியிட்டன. ஆனால் அதிகாரப்பூர்வமான செய்திகள் இதுவரை வெளியாகவில்லை.
பல்வேறு முறை இதேபோல் பஸ்லுல்லாஹ் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு முன்பாக கடந்த 2014-ம் ஆண்டு செய்தி வெளியானது. ஆனால் அது தவறு என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஹகிமுல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பிற்கு பஸ்லுல்லாஹ் தலைவராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating