முன்னாள் காதலரின் மகளை கழுத்து நெரித்துக் கொன்ற ரஷ்ய அழகுராணிக்கு 12 வருடகால சிறைத்தண்டனை…!!
ரஷ்யாவைச் சேர்ந்த அழகுராணியொருவர் தனது முன்னாள் காதலரின் மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
23 வயதான எக்கெத்தரினா பொபேரிஸ்னயா எனும் இந்த யுவதி, ரஷ்யாவின் தென் கிழக்குப் பிராந்தியமான பிரிமோர்ஸ்கி கிராய் பகுதியிலுள்ள லஸோ எனும் சிறிய கிராமத்தில் வசித்தவர்.
அவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த இளைஞர் ஏற்கெனவே மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்றவர்.
பின்னர், எக்கெத்தரினாவுடனான காதலை முறித்துக் கொண்ட அந்த இளைஞர், தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துகொண்டார்.
முன்னாள் காதலரின் இந் நடவடிக்கை எக்கெத்தரினாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அவரை பழிவாங்குவதற்குக் காத்திருந்த எக்கெத்தினா, முன்னாள் காதலரின் 10 வயதான மகளை இலக்கு வைத்தார்.
அச் சிறுமி எக்கெத்தரினாவின் வீட்டுக்குள் ஒருநாள் நுழைந்தபோது அச் சிறுமியை கழுத்து நெரித்து எக்கெத்தரினா கொலை செய்தார் என நீதின்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து எக்கெத்தரினா பொபேரிஸ்னயாவுக்கு 12 வருடகால சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரஷ்யாவில் அண்மைக் காலத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஷ்ய அழகுராணி இவர் மாத்திரமல்லர்.
அனஸ்டேஷியா கிராவ்ட்சோவா எனும் மற்றொரு ரஷ்ய அழகுராணி போதைப் பொருள் விநியோகித்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
23 வயதான அனஸ்டேஷியா எனும் இந்த யுவதி, தனது சொந்த நகரில் மிஸ் யூனிவர்சிட்டி அழகுராணி பட்டம் உட்பட பல போட்டிகளில் வெற்றியீட்டியவர், ஆனால், இவரின் காதலர் ஒரு போதைப் பொருள் வியாபாரி.
அனஸ்டேஷியா சுற்றுலா மேற்கொண்டபோது தனது வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருட்களை விநியோகிக்குமாறு அவரின் காதலர் வலியுறுத்தினாராம்.
இதையடுத்து போதைப்பொருட்களையும் தன்னுடன் எடுத்துச்சென்றார் அனஸ்டேஷியா.
ஆனால், மாறு வேடத்திலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அனஸ்டேஷியா போதைப் பொருள் விநியோகித்தபோது அவர் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து அனஸ்டேஷியாவும் அவரின் 26 வயதான காதலரும் கைது செய்யப்பட்ட னர்.
இது தொடர்பான வழக்கில் அனஸ்டேஷியாவுக்கு 4 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating