பெண் ஒருவரை தாக்கிய ஏழு பேர் கைது – தொடர்ந்தும் விளக்கமறியலில்…!!
திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் பெண்ணொருவரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற பதில் நீதிவான் ரி.சரவணராசா நேற்று (25) உத்தரவிட்டார்.
குச்சவெளி, ஜாயா நகர், பல்லவக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.கே.ஏ.சலாம் வயது(36), அப்துல் ரசாக் நில்பர் வயது(34), சவாஹிர் அப்துல் வாகிது வயது(25), அலி அக்பர் அசாம் வயது(18), அலி அக்பர் அலிபுகான் வயது(24), அப்துல் சலாம் சிகான் வயது(18), அலி அக்பர் அஸார்கான் வயது(19), ஆகியோரே விளக்கமறியலில் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளனர்.
குச்சவெளி ஜாயா நகர் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் பாலர் பாடசாலை அமைப்பதற்கு முற்பட்ட வேளையில் பெண்ணொருவருக்கு பிளேட்டினால் வெட்டி காயம் ஏற்படுத்தியதாக குறித்த சந்தேக நபர்களுக்கெதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஏழு சந்தேக நபர்களையும் நேற்று (25) கைது செய்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயங்களுக்குள்ளான குறித்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை அன்றைய தினமே குச்சவெளி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
Average Rating