பெற்றோர்களிடம் மாணவிகள் மீது பாலியல் புகார் கூறி மிரட்டல்…!!

Read Time:2 Minute, 4 Second

9e5a074d-12e4-4989-b2df-cb7937683fd2_S_secvpf3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வந்த வந்த வண்ணம் உள்ளன. இந்த கல்லூரியில் செலுத்தப்படும் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் போன்றவற்றுக்கு உரிய ரசீதுகள் கொடுக்கப்படவில்லை. மேலும் அறிவித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்துள்ளனர். இது பற்றி கேள்வி கேட்ட மாணவிகளை நிர்வாகத்தில் இருந்து கடுமையாக மிரட்டி உள்ளனர்.

அந்த மாணவியின் பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தில் இருந்தே நேரடியாக போன் செய்து உங்கள் மகளுக்கு தவறான பழக்க வழக்கங்கள் உள்ளன. ஆண் நண்பர்களுடன் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறார். பாலியல் ரீதியாக அவளுடைய நடவடிக்கை சரியில்லை என தவறான தகவல்களை கூறி உள்ளனர். இதனால் பல மாணவிகளின் பெற்றோர் தங்கள் மகள்களை கண்டித்துள்ளனர்.

பெற்றோர்களிடத்தில் இப்படிப்பட்ட புகார்களை கூறினால் மாணவிகள் பயந்து விடுவார்கள் என கருதி தவறான தகவல்களை கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாகவே நாங்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு பயந்து நடந்து கொண்டோம் என மாணவிகள் தெரிவித்தனர்.

இந்த தகவலை தற்கொலை செய்த மாணவிகள் தங்கள் கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளனர். நாங்கள் தற்கொலை செய்ததற்கு கேரக்டர் சரியில்லாததுதான் காரணம் என கல்லூரி நிர்வாகத்தில் இருந்து சொல்வார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம் என அந்த கடிதத்தில் கூறி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் சாலையில் படர்ந்த பனியை தந்தை அகற்றும்போது காருக்குள் இருந்த தாயும், குழந்தையும் பலியான சோகம்…!!
Next post அதிராம்பட்டினத்தில் சீனியர்கள் திட்டியதால் வகுப்பறையில் கல்லூரி மாணவி தற்கொலை…!!