செல்போன் வெடித்து தம்பதி பலி ; மகன் கவலைக்கிடம் – தமிழகத்தில் சம்பவம்…!!

Read Time:2 Minute, 44 Second

gfhgமெத்­தையில் செல்­போனை வைத்து சார்ஜ் செய்­ததால் செல்போன் வெடித்து உறங்கி கொண்­டி­ருந்த தம்­பதி உயி­ரி­ழந்­துள்ள சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் வியாசர்பாடி பகு­தியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்­து­வரும் தினேஷ் அதி­காலை 5 மணிக்கு எழும்­பு­வ­தற்­காக செல்­போனில் அலாரம் தயார் செய்து வைத்­தி­ருந்தார்.

அப்­ப­டியே செல்­போனை மெத்­தையில் வைத்து சார்ஜ் போட்டபடி குடும்பத்தினர் உறங்கச் சென்­றுள்­ளனர்.

பின்னர் அதி­காலை 5 மணி அளவில் செல்­போனில் அலாரம் அடித்த­போது அது பயங்­கர சத்­தத்­துடன் வெடித்து சித­றி­யுள்­ளது.

அப்­போது செல்­போனும் தீப்­பி­டித்து எரிந்­து செல்போன் வைக்­கப்­பட்­டி­ருந்த மெத்­தையும் தீப்­பி­டித்­துள்­ளது.

பின்னர் தீ கட்­டி­லுக்கும் பரவி வீடு முழுக்க பற்­றி­யுள்­ளது.

இந்­நி­லையில் உறங்கி கொண்­டி­ருந்த தினேஷின் தாய், தந்தை ஆகிய 3 பேரும் அல­றி­ய­டித்துக் கொண்டு தூக்­கத்­தி­லி­ருந்து எழுந்­துள்­ளனர்.

எனினும் அவர்­களால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடி­ய­வில்லை.

மூவரின் உட­லிலும் தீ பற்றி­யுள்­ள நிலையில் வீட்­டுக்­குள்­ளேயே தீயில் சிக்­கியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த வியா­சர்­பாடி தீய­ணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்­தனர்.

இத­னை­ய­டுத்து 3 பேரும் உட­ன­டி­யாக கீழ்ப்­பாக்கம் அரச வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டனர். அங்கு அவர்­க­ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

ஆனால், நேற்று முன்­தினம் நள்­ளி­ரவில் ராஜேந்­தி­ரனும், நேற்று அதி­கா­லையில் ராணியும் அடுத்­த­டுத்து உயிர்­ழந்­துள்­ளனர்.

உயி­ருக்கு ஆபத்­தான நிலையில் தினேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய போலீசார்…!!
Next post பெண் பொலிஸார் தங்கும் அறைக்குள் ஆண் கான்ஸ்டபிள் நுழைந்ததால் பரபரப்பு…!!