பாடசாலை சென்ற 12 வயது மாணவன் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து..!!
Read Time:1 Minute, 22 Second
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஒருவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று புதன்கிழமை (27) காலையில் இடம்பெற்றுள்ளது.
ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் நிப்கி முகம்மட் வயது(12) என்ற சிறுவனே விபத்தில் படுகாயமடைந்தவராவர்.
குறித்த மாணவன் வீதியை கடக்க முற்பட்ட போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மாணவன் மோதுண்டதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளிலில் சென்றவர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிப்பதோடு குறித்த நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating