ஆசிரியர், 55 மாணவர்களுக்கு குளவிக் கொட்டு…!!
Read Time:57 Second
கடுகஸ்தோட்டை பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 55 பேர் மற்றும் ஆசிரியர் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அப் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இவர்கள் அனைவரும் கடுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் ஆசிரியர் மற்றும் 44 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வௌியேறியுள்ளனர்.
மேலும் 9 மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Average Rating