விபத்தில் வயோதிப பெண் பலி; சாரதி தப்பியோட்டம்…!!
Read Time:1 Minute, 9 Second
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலை A9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
மீசாலைச் சந்தியிலுள்ள மஞ்சள் கோட்டுக்குக் கடவையை வயோதிபர் கடக்க முற்பட்டபோது வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மீசாலை மேற்கு மீசாலையைச் சேர்ந்த சின்னையா வள்ளிப்பிள்ளை (62) எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தை அடுத்து மோட்டார் சைக்கிள் சாரதி தப்பி ஓடியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating