யானையிடம் இருந்து தப்பித்து நாகப்பாம்பிடம் உயிரை விட்ட வாலியர்…!!
காட்டுயானையிடம் இருந்து தப்பிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் ஒருவர் நாகப்பாம்பு தீண்டி பலியான சம்பவம் ஒன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த நபர் தனது நண்பர்கள் இருவரோடு தமது கிராமத்திற்கு அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.
விறகுகளை சேகரித்து கொண்டு வரும் வழியில் குறித்த மூவரையும் காட்டு யானை துறத்தியுள்ளது .
அதனிடம் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள மூவரும் ஓடிவுள்ள நிலையில் ஒருவர் அருகில் இருந்த மரத்தில் ஏறியுள்ளார்.
நண்பன் மரத்தில் ஏறியதை கவனிக்காத மற்றைய இருவரும் அவர்களது கிராமத்திற்கு சென்று கிராமத்தவர்களுடன் வந்து குறித்த நபரை தேடியுள்ளபோதிலும் அவர் கிடைக்கவில்லை .
இந்நிலையில் , சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கும் காவற்துறைக்கும் தெரியப்படுத்தியதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் மரமொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் உடலில் நாகப்பாம்பு தீண்டியுள்ளதற்கான அடையாளம் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating