பணமோசடி புகார்: சென்னையை சேர்ந்த 5 பேர் உள்பட 8 பேர் கைது…!!

Read Time:3 Minute, 38 Second

944d67a7-d98c-48ba-93fe-86bec930ca46_S_secvpfதிருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அ.தி.மு.க.வில் உறுப்பினராகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய நண்பர் திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன்(40). இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட வெங்கடபுரத்தை சேர்ந்த ஆயிஷாபேகம்(48) என்பவரிடம் தனது உறவினர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக பணம் கொடுத்து ஏமாந்திருந்தார்.

இந்தநிலையில் சரவணனை தொடர்பு கொண்ட ஆயிஷாபேகம், மன்னார்குடியை சேர்ந்த முக்கிய பிரமுகரின் பெயரை சொல்லி அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ., சீட்டு வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் முன் பணமாக கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு சரவணன், தன்னிடம் தற்போது ரூ.50 ஆயிரம் மட்டுமே இருப்பதாக கூறினார்.

அதன்பேரில் மன்னார்குடிக்கு வந்த ஆயிஷாபேகம், முக்கிய பிரமுகர் வீட்டின் அருகே நின்று கொண்டு ஏற்கனவே அங்கு தயாராக இருந்த பிரசாத்குமாரிடம் முக்கிய பிரமுகர்போல் சரவணனிடம் போனில் பேச சொல்லி ரூ.50 ஆயிரம் பணத்தை பெற முயன்றார். அப்போது அங்கு மேலும் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது முக்கிய பிரமுகரின் ஆதரவாளர்கள் அங்கு நின்று கொண்டிருந்த 8 பேரை மடக்கி பிடித்து மன்னார்குடி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சென்னை மந்தைவெளியை சேர்ந்த பிரசாத்குமார்(39), வடபழனியை சேர்ந்த ஆர்.டி.சேகர்(40), மேலத்திருப்பாலக்குடியை சேர்ந்த சுமன்(33), சென்னை புளியந்தோப்பை சேர்ந்த அமர்நாத்(58), அரும்பாக்கத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன் (37), சூளைமேட்டை சேர்ந்த சுரேஷ் (44), ஆயிஷா பேகம்(48), அவருடைய கணவர் சாதிக்பாட்சா (50) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் தற்போது தேர்தல் நேரமாக இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அ.தி.மு.க.வினரிடம் பெருமளவில் பணம் பெற முயன்றதும் தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய 3 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீடாமங்கலம் குற்றவியல் நீதிபதி முருகன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கி பத்து குழந்தைகள் உள்பட 25 பேர் பலி…!!
Next post அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் இனி பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷனும் செய்து கொள்ளலாம்…!!