பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாய்…!!
Read Time:1 Minute, 5 Second
தனது ஐந்து மாத பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று பகல் 01.20 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கைதுசெய்யப்பட்டவர், மொரட்டுவை – லுனாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மொரட்டுவை ரயில் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை தற்போது பொலிஸார் வசம் உள்ளது.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற வேளை, சந்தேகநபர் போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இவரை இன்று குழந்தையுடன் மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating