கடலை கடக்க முயன்ற குடியேற்றவாசிகள் 33 பேர் பலி…!!
Read Time:1 Minute, 8 Second
ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு பிரவேசிக்க முயற்சித்த குடியேற்றவாசிகளில் குழந்தைகள் உட்பட சுமார் 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி குடியேற்றவாசிகள் படகுமூலம் லெஸ்போஸ் தீவுக்கு செல்ல முயற்சித்ததாக அந்த நாட்டுக் காவற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 75 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 20 பேரைக் காணவில்லை என்று உயிர்தப்பியவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் லெஸ்போஸ் தீவை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating