விருகம்பாக்கத்தில் வீடுகளுக்கு பெண்களை அனுப்பி விபசாரம்: பெண் புரோக்கர் கைது; 4 அழகிகள் மீட்பு

Read Time:3 Minute, 23 Second

00004579.gifவிருகம்பாக்கம் பகுதியில் புரோக்கர் ஒருவர் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு குடும்ப பெண்களை வீட்டுக்கே அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் விருகம்பாக்கம் இன்ஸ் பெக்டர் விஜயகுமார், சப்- இன்ஸ் பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் விருகம் பாக்கம் காமராஜர் சாலை பகுதியில் அதிரடி வேட்டை நடத்தினார்கள். போலீசார் வாடிக்கை யாளர்கள் போல மொபைல் போனில் புரோக்கர் கணேஷ் (25) என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசி னார்கள். அப்போது அவர் அழகிகளை வீட்டுக்கே அழைத்து வருகிறோம். முகவரி கொடுங்கள் என்றார். அதற்கு போலீசார் அங்குள்ள சமுதாய நலக் கூடத்துக்கு அழைத்து வருமாறு கூறினார்கள். சிறித நேரத்தில் கணேஷ் ஆட்டோவில் 5 பெண்களை அழைத்து வந்தார். அப் போது போலீசார் அவரை பாய்ந்து சென்று பிடித்த னர். ஆட்டோவில் ராய புரத்தை சேர்ந்த ஜெயா (48), ராயப்பேட்டையை சேர்ந்த சம்ருத்நிஷா (26), சேத்துப்பட்டை சேர்ந்த கவிதா (32), இந்து (36), ஆந்திராவை சேர்ந்த லட்சுமி (20) ஆகியோர் இருந்தனர்.

இவர்களில் ஜெயா பெண் புரோக்கர் ஆவார். மற்ற 4 பேரும் குடும்ப பெண் கள். அவர்களை ஜெயா அணுகி பணத்தாசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தினார்.. சம்ருத்நிஷாவின் கணவர் துபாயில் உள்ளார். அவருக்கு தெரியாமல் அவர் விபசாரத்தில் ஈடுபட்டார். அதே போல் கவிதா, இந்து இருவரும் கணவருக்கு தெரியாமல் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கணேஷ் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் ஜெயா, பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தார். என்னிடம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் களுக்காக ஜெயாவிடம் இருந்து பெண்களை வர வழைத்து உல்லாசத்துக்கு அனுப்பினேன். வாடிக்கை யாளர் முன்பு நாலைந்து பெண்களை நிறுத்துவோம். அவர்கள் கேட்கும் அழகிகளை பொறுத்து ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வசூலிப்போம். கொஞ்ச பணத்தை விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கு கொடுத்து விட்டு மீதியை நான் வைத்துக் கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புரோக்கர்கள் ஜெயா, கணேஷ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். சம்ருத்நிஷா, கவிதா, இந்து, லட்சுமி ஆகியோரை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 18 வயது மன்மத ராசாவுடன் ஓட்டம் பிடித்த 32 வயது மன்மத ராணி…!
Next post தமிழ்நாட்டிற்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் இல்லை: சென்னையில் ராணுவ தளபதி பேட்டி