சிரியாவில் ஷியா பிரிவு வழிப்பாட்டு தளம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 45 பேர் பலி…!!

Read Time:1 Minute, 15 Second

135db1e9-957e-40b1-bee7-5b5103463575_S_secvpfசிரியாவில் வழிப்பாட்டுத் தளம் ஒன்றில் அருகே நிகழ்த்தப்பட்ட மூன்று குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும் முதல்கட்டமாக அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனமான சனா கூறியிருந்தது.

சிரிய தலைநகர் டமாஸ்கஸ்சின் தெற்குப்பகுதியில் உள்ள ஷியா பிரிவு வழிப்பாட்டு தளம் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் 45 பேர் பலியாகியுள்ளதாகவும், 110 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே வழிப்பாட்டு தளம் அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெமராவின் உதவியால் குழந்தையின் கண்ணிலிருந்த புற்றுநோயை கண்டுபிடித்த தாய்…!!
Next post அகதிகளுக்கு எதிராக முகமூடி அணிந்த கும்பல் ஊர்வலம்- சுவீடனில் அதிகரித்துவரும் பதற்றம்…!!