பொன்சேகா – ரணில் உடன்படிக்கை அடுத்த வாரம்…!!
Read Time:1 Minute, 23 Second
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி எதிர்வரும் வாரத்தில் தேசிய முன்னணியுடன் இணையவுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிற்குமிடையேயான சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் மேல்மாகாண சபை உறுப்பினர் இந்திக பண்டாரநாயக்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தற்போது வெற்றிடமாக காணப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பதவிவை வழங்க உடன்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே போல் அவருக்கு அமைச்சுப்பதவியும் எதிர்வரும் நாட்களுக்குள் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Average Rating