லாரியில் இருந்து பாறை சரிந்து டிரைவர் பலி

Read Time:1 Minute, 9 Second

கல் குவாரியில் லாரியில் ஏற்றப்பட்ட பெரிய பாராங்கல் தவறி விழுந்ததில் கீழே நின்றிருந்த லாரியின் டிரைவர் பலியானார். பம்மல்-திருநீர்மலை சாலையில் பல்லாவரம் அருகே உள்ள ஒரு குவாரியில் இச் சம்பவம் நடந்தது. லாரியில் கிரேன் மூலம் ஏற்றப்பட்ட பெரிய கல் சறுக்கி கீழே விழுந்ததில் லாரி அருகே நின்றிருந்த அதன் டிரைவர் அன்பு (25) பாறையின் கீழே சிக்கி உடல் நசுங்கி பலியானார். மேலும் நால்வர் காயமடைந்தனர். தமிழகத்தில் டிப்பர் லாரிகள் எனப்படும் அரைபாடி லாரிகளில் அதன் கொள்ளவையும் தாண்டி மிகப் பெரிய அளவில் பாறைகளை ஏற்றிக் கொண்டு படு வேகத்தில் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த லாரிகளின் பின்னே செல்லும் வாகனங்களுக்கு எப்போதுமே ஆபத்து தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழ்நாட்டிற்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் இல்லை: சென்னையில் ராணுவ தளபதி பேட்டி
Next post விடுதலைப்புலிகள் ஊடுருவல்: மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை